Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங்பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற வருகை தந்த சுகாதாரத்துறை செயலர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர், அரசு அலுவலர்களுடன் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ வசதிகள், உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, மருத்துவமனையின் சுகாதாரம், சமையல் போன்ற வற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மருத்துவர்கள், நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அணைப்பாளையம் பகுதியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கப் படவுள்ள இடத்தினையும் அவர் நேரில் சென்று இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை செயலருடன், மாவட்ட ஆட்சியர் ச.உமா, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.